கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்
Read Time:1 Minute, 4 Second
கர்ப்பிணிப் பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் அது குழந்தையை பாதிக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. லண்டன் ராயல் மருத்துவக்கல்லூரி நிபுணர்கள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றை கர்ப்பிணி பெண்களும், பால் கொடுக்கும் பெண்களும் சாப்பிட்டால் அது குழந்தையை பாதிக்கும் என்பது தெரியவந்தது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது பெண் சத்தான உணவுகளை சாப்பிட்டால் அது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும். அப்படி இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிட்டால் அது குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Average Rating