சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!!
Read Time:55 Second
கலேவல, கட்டுவாலந்த, வககோட்டே பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவல பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து போர 12 வகையான துப்பாக்கியொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (19) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating