காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து: இந்திய மாணவருக்கு 16 ஆண்டு ஜெயில், 16 கசையடி -சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு

Read Time:1 Minute, 32 Second

இந்தியாவைச் சேர்ந்த பட்லா ஜதின் நவீன் (வயது 23) என்பவர், சிங்கப்பூரில் ஒரு பாலிடெக்னிக்கில் மெரைன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவருக்கும், சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷகானி மாணிக்ராம் (வயது 72) என்பவரின் மகள் மம்தாவுக்கும் (வயது 38) இடையே காதல் ஏற்பட்டது. மம்தா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 8 வயதில் மகனும் உள்ளான். நவீன்-மம்தாவின் பொருந்தா காதல், 2 ஆண்டுகளுக்கு முன்பு முறிந்து விட்டது. இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் மம்தாவை பார்க்க அவரது வீட்டுக்கு நவீன் சென்றார். அவர் மம்தாவை பார்க்க ஷகானி மாணிக்ராம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், அவரை கத்தியால் குத்தினார். தடுக்க வந்த 2 வேலைக்கார பெண்களையும் கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் நவீனுக்கு 16 ஆண்டு சிறைத்தண்டனையும், 16 கசையடியும் வழங்குமாறு ஐகோர்ட்டு நீதிபதி கன்திங் சியு தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவிகளை இலக்கு வைத்து காவல்துறைமா அதிபர்கள் செயலாற்றுகின்றனர் -ஐ.தே.க குற்றச்சாட்டு
Next post கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்