ஈரானில் மோசமான வானிலை காரணமாக நொறுங்கிய விமானத்தை கண்டறிவதில் சிக்கல்!!

Read Time:1 Minute, 40 Second

ஈரானில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் நீடிக்கும் மோசமான வானிலையால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் நொறுங்கி விழுந்த இஸ்பகான் மாகாணத்தில் மலைகள் அதிகமுள்ள பகுதியாகும். அங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்றும், பெருமழை பெய்து வருகிறது.

இதனால் விமானம் விபத்துக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலையால் திரும்பி வந்துவிட்டன. வான்வழியை தவிர்த்து தரை வழியே மீட்பு நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து மீட்பு படைக்கு வழிகாட்டும் பணியில் 70 மலையேரும் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 65 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் டெஹ்ரானி உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ATR-72 வகை சிறிய ரக விமானம் மோசமான வானிலை காரணமாக செமிரோம் மலை நகரத்தின் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு!!
Next post விஷால் மருத்துவமனையில் அனுமதி… !!