முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த 39 பொது மக்கள் படையினரிடம் தஞ்சம்!

Read Time:1 Minute, 13 Second

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 பொது மக்கள் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியில் இருந்து தப்பிவந்து புல்மோடையில் உள்ள படையினரிடம் கடந்த புதன்கிழமை மாலை தஞ்சம் புகுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். ஆண்கள் 26 பேரையும் பெண்கள் 13 பேரையும் கொண்ட இக்குழுவினர் படகொன்றின் மூலம் தப்பி வந்துள்ளனர். பதுங்கு குழிகளைத் தோண்டுதல் போன்ற கஷ்டமான வேலைகளில் தாம் புலிகளால் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டதாக இக்குழுவினர் படையினரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை படையினர் வழங்கியுள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கை விட்டனர்
Next post பதவிகளை இலக்கு வைத்து காவல்துறைமா அதிபர்கள் செயலாற்றுகின்றனர் -ஐ.தே.க குற்றச்சாட்டு