அனைவருக்கும் சட்டம் சமன் என்ற அடிப்படைpல் கருணா கைது செய்யப்பட வேண்டும் -தமிழ் தேசிய கூட்டமைப்பு
Read Time:1 Minute, 6 Second
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கருணாவை இலங்கை அரசாங்கம் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரித்தானியாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த கருணா போலியான கடவுச்சீட்டின் மூலமே இலங்கைக்கு வந்துள்ளார் இந்தநிலையில் சட்டத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் சட்டம் என்பது அனைவருக்கும் சமன் என்ற அடிப்படையில் கருணாவுக்கும் உரிய தண்டணை வழங்கப்பட வேண்டும் அவருக்கு மாத்திரம் விஷேட முன்னுரிமை வழங்க முடியாது என்றும் சிறீகாந்தா குறிப்பிட்டார் என தெரிவிக்கப்படுகிறது
Average Rating