எல் சல்வடார் நாட்டில்: ஆற்றில் பஸ் அடித்து செல்லப்பட்டு 29 பேர் பலி
Read Time:54 Second
எல் சல்வடார் நாட்டின் தலைநகர் சான் சல்வடாரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், அங்கு ஒரு தேவாலய ஊழியர்கள் 30 பேர் பயணம் செய்த பஸ், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 29 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். அவர்களில் 19 பேரின் உடல்கள், விபத்து பகுதிக்கு அருகிலும், மீதி 10 பேரின் உடல்கள், விபத்து பகுதியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கைப்பற்றப்பட்டன. மீதி ஒருவரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள்.
Average Rating