பெர்லின் அருங்காட்சியகத்தில் ஹிட்லரின் மெழுகு சிலையில் தலை உடைப்பு: ஆசாமி கைது
Read Time:1 Minute, 10 Second
ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஜெர்மனியின் மறைந்த சர்வாதிகாரி ஹிட்லரின் மெழுகு சிலை நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த சிலையை 25 பேர் சேர்ந்து 4 மாதங்களாக பணியாற்றி உருவாக்கி உள்ளனர். ஆனால் இந்த சிலை, ஹிட்லர் தனது கடைசி காலத்தில் இருண்ட பாதாள அறையில் சோகமாக உருவாக, தலை கவிழ்ந்து நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் நாளான நேற்றே ஹிட்லர் சிலையின் தலையை 41 வயதான ஒரு ஆசாமி உடைத்து விட்டார். ஹிட்லர் சிலை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் அப்படி செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating