துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
Read Time:1 Minute, 5 Second
பொல்கஹவெல, பட்டேகும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating