வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!!

Read Time:1 Minute, 46 Second

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இந்த அறிக்கையை சமர்பித்திருந்தது.

இதனையடுத்து குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றானது, அந்நிபந்தனையை தளர்த்தி இனிமேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இட தேவையில்லை என பணிப்புரை பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?
Next post காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!!