நடன அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவி உயிரிழந்தார்!!
Read Time:1 Minute, 0 Second
புஸ்ஸல்லாவ – அடபாகே பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் பாடசாலை நடன பயிற்சி அறையின் அருகில் மயக்கமுற்ற மாணவியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மில்லகஹவத்த, பன்விலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று (02) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.
Average Rating