ஜிம்பாப்வேயில் சமரசம்
Read Time:1 Minute, 7 Second
ஜிம்பாப்வேயில் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ராபர்ட் முகாபே அதிபர் பதவியில் நீடிப்பார் என்றும், பிரதமராக எதிர்க்கட்சியை சேர்ந்த மார்கன் ஸ்வாங்கிராய் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. இந்த சமரச திட்டத்தை தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ மெகி முன்மொழிந்திருப்பதாக கார்டியன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்வாங்கிராயின் ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது. புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெறும் வரை முகாபே அதிபராக நீடிப்பார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
Average Rating