நடிகரிடம் மரியாதை குறைவாக நடந்தேனா? சாய் பல்லவி பதில் !!

Read Time:2 Minute, 21 Second

பிரேமம் படத்தில் நடித்தவர் சாய் பல்லவி. தமிழில் விஜய் இயக்கும் கரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக தெலுங்கில் 2 படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் சாய்பல்லவி மரியாதை குறைவாக நடந்து கொண்டார், அவரது செயல்கள் தன்னை எரிச்சல் அடைய வைத்ததாக நடிகர் நாக சவுரியா சில தினங்களுக்குமுன் புகார் கூறினார். இதுபற்றி சாய் பல்லவியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
நாக சவுரியாவுடன் என்ன பிரச்னை செய்தேன் என்று தெரியவில்லை. அவரிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ளவில்லை.

அதுபற்றி என்னிடம் அவர் ஒருபோதும் கேட்டதுமில்லை. ஆனால் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அப்போதுதான் எனது செயல்பாட்டை நான் உணரமுடியும். யாரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது நல்லது குறிப்பாக சினிமாபோன்ற துறையில் இது அவசியம். நாக சவுரியா என்னைப்பற்றி தவறாக கூறியதால் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது.

உடனே இயக்குனர் விஜய்யை அணுகி படப்பிடிப்பில் எனது நடத்தையில் எங்கு தவறு நடக்கிறது என்று கண்காணித்து சொல்லுங்கள் என்றேன். அதன்பிறகு அவரோ மற்ற யாருமோ என் மீது புகார் எதுவும் இல்லை என்றுதான் கூறினார்கள். என்ன தவறு என்று தெரிந்தால் அதை திருத்திக்கொள்வேன். நாகசவுரியாவின் புகாரால் என் மனம் பாதித்தது உண்மைதான். ஆனால் அவரது வெளிப்படையான பேச்சை மெச்சுகிறேன். இனிமேல் அவர் என்னைப்பற்றி தவறாக நினைக்க மாட்டார் என நம்புகிறேன். இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா!!
Next post (மருத்துவம்)ஈஸி எக்ஸர்சைஸ்!!