ஈரானின் தாக்குதலை சமாளிக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும்: அமெரிக்க கடற்படை அதிகாரி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். அதனை எதிர் கொள்ள நேட்டோ படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார். ஈரானை “கணிக்கமுடியாத எதிரி’ என்றும் அவர் வர்ணித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் மாதாந்திர அறிக்கையில் அவர் கூறியிருப்பது: இஸ்ரேல் மீது ஈரான், பேலஸ்டிக் ரக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இஸ்ரேலை தாக்கும் நோக்கத்துடன் 3 ஏவுகணைகளை ஈரான் பரிசோதனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதனை நேட்டோ நாடுகள் கருத்தில் கொண்டு மிகக்கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே இஸ்ரேல் சென்ற நேட்டோ அதிகாரிகள் அங்கு ஏவுகணைத் தாக்குதல் முறியடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளது என்று நேட்டோ அதிகாரி மைக்கேல் தெரிவித்தார். ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Average Rating