வங்காளதேசத்தில் பஸ்கள் மோதியதில் 20 பேர் பலி
Read Time:41 Second
வங்காளதேசத்தில் ஒரு சாலை விபத்தில் 20 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து டாக்கா- சிட்டகாங் நெடுஞ்சாலையில் கோமில்லா மாவட்டத்தில் இலியோகஞ்ச் என்ற இடத்தில் நடந்தது. 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து ஒரு பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் 20 பேர் பலியானார்கள். 19 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களில் 2பேர் பெண்கள்.
Average Rating