மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!
Read Time:44 Second
பலங்கொடை, பின்னவல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விலங்குளிடமிருந்து தோட்டங்களை பாதுகாப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர் ஒன்றில் சிக்கியதிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னவல, வீதாகம பகுதியை சேர்ந்த 47 வயதிடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating