மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!!
குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் சுதீரகம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், அட்டவில்லுவ பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டவெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.