இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் 3 38 000க்கும் அதிகமானோர் மோதலில் பலி
இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் கடந்த 2002ம் ஆண்டு வரை 275000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஹவாட் மருத்துவக்கல்லூரி ஆகியன நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இத்தொடர்மோதல்களினால் 338000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது மோதல்களில் நேரடியாக கொல்லப்பட்டவர்கள் குறித்து உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையே 215000 எனவும் கூறப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரால் மேலும் பலர்கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் 1983ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்களினால் 70ஆயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டிருப்பதாக தமிழகத்தின் மாலை நேரபத்திரிகையான நியுஸ் டுடே செய்திவெளியிட்டுள்ளது இந்த தகவல் ஆய்வின் தகவலுடன் முரண்பட்டுள்ளது. என மேலும் தெரிய வருகிறது.
Average Rating