ரூ. 350 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!!
Read Time:1 Minute, 0 Second
புத்தளம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, 35 கிலோகிராம் ஹெரோய்ன், 2 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புத்தளம் மேல்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று பகல் அழிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவின் உத்தரவுக்கமைய, அவை அழிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு கீரியன்கல்லிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3 சந்தேகநபர்களிடமிருந்து இந்த போதைப்பொருளை கைப்பற்றியதாகவும், இதன்பெறுமதி 350 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating