இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு

Read Time:3 Minute, 11 Second

சர்வதேச ஒசாமா பின்லேடனின் 16 வயதேயான இளைய மகன் ஹம்சா பின்லேடன் ஒரு கவிதை எழுதி இருக்கிறான். அதில் இங்கிலாந்தை அழித்து ஒழிக்க வருமாறு தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறான். அமெரிக்காவின் நிïயார்க் நகரின் மீது விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தி 3ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர் ஒசாமா பின்லேடன். இந்த தாக்குதல் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். சவுதிஅரேபியாவை சேர்ந்த ஒசாமாவுக்கு மொத்தம் 18 மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தன்னை விட வயது அதிகம் உள்ள பேரன், பேத்திகளை எடுத்த இங்கிலாந்து நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டில் குடியேற காத்துஇருக்கிறார். இன்னொரு மகன் தான் ஹம்சா. கடைக்குட்டியான இவனுக்கு வயது 16 தான் ஆகிறது. இவன் ஒசாமாவின் பயங்கரவாதத்தின் பட்டத்து வாரிசு என்று அழைக்கப்படுகிறான். இவன் ஒருவன் தான் ஒசாமாவின் சவுதி மனைவிக்கு பிறந்த மகன் ஆவான். மற்றவர்கள் எல்லாம் பிற நாட்டு பெண்களுக்கு பிறந்தவர்கள். ஹம்சா பாகிஸ்தான் நாட்டில் வசீரிஸ்தான் பிரதேசத்தில் வசித்து வருகிறான். இவனைப்பற்றி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்டவருமான பெனாசிர் தான் எழுதிய சுயசரித்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். என்னை கொல்வதற்கு பல குழுக்கள் சதித்திட்டம் தீட்டி வருகின்றன. இவற்றில் ஒரு குழு, ஹம்சா தலைமையில் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவன் தீவிரவாதிகளின் இணையதளத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டு இருக்கிறான். இதை நான்தான் எழுதினேன் என்று கூறிக்கொள்கிறான். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 7-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் லண்டனில் நடத்திய ரெயில் தாக்குதல்களில் 52 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல்களின் 3-வது ஆண்டு தினத்தையொட்டி, அந்த கவிதையை அவன் எழுதி இருக்கிறான். அதில் அவன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, டென்மார்க் ஆகிய நாடுகளை விரைவில் அழித்து ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா
Next post நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்