சண்டை கற்றுக்கொள்ள ரித்திகா சிங் அட்வைஸ்(சினிமா செய்தி) !!

Read Time:1 Minute, 48 Second

குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங் தமிழில் ‘இறுதி சுற்று’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். படத்திலும் அவர் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்தார். மாதவன் ஹீரோவாக நடித்த இப்படத்தை சுதா கொங்கனா இயக்கி இருந்தார். அடுத்து விஜய்சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘வணங்காமுடி’ படத்தில் அரவிந்த்சாமியுடன் நடித்து வருகிறார். சமீபத்தில், ‘ஐயம் ஸாரி’ குறும்படமொன்றில் நடித்திருந்தார் ரித்திகா. பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகளை இதன் கருவாக அமைத்து அஸ்வின் சதுர்வேதி இயக்கி இருந்தார்.

இதுபற்றி ரித்திகா கூறும்போது,’ முதலில் நான் ஒரு பெண், பிறகுதான் நடிகை. பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தல் தருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். அதற்காக ஏதாவது ஒரு மார்ஷல் கலையை கற்று வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலமாகத்தான் தங்களுக்கு வரும் இதுபோன்ற தொல்லையிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் எதிர்த்து போராடி தங்களை காத்துக் கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலம்(வீடியோ)!!
Next post மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை!!