துருக்கி நாட்டில்: அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலி

Read Time:1 Minute, 38 Second

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 3 போலீஸ்காரர்களும், 3 தீவிரவாதிகளும் பலியானார்கள். தூதரகத்துக்கு ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் காரில் இருக்க மற்ற 3 பேர் மட்டும் வெளியே வந்தனர். அவர்கள் பாதுகாப்புக்காக நின்று இருந்த போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து போலீசாரும் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டனர். கிட்டத்தட்ட 15 நிமிடம் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 போலீஸ்காரர்கள் பலியானார்கள். காரில் இருந்து வெளியே வந்த 3 பேரும் கொல்லப்பட்டனர். பலியான 3 பேரும் நீண்ட தலைமுடியும், தாடியும் வைத்து இருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். காரில் இருந்த ஒரு தீவிரவாதியும் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். துருக்கியில் மாவோயிஸ்டுகள், குர்திஷ்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆகியோர் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர்களை சந்திக்கிறார்