கங்கையில் தனது மகனை வீச முயன்ற தாய் கைது
Read Time:1 Minute, 24 Second
தனது ஆறுவயது மகனை கங்கையில் வீச முயன்றார் எனக்கூறப்படும் தாயொருவரை களுத்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் களுத்துறை வடக்கு பொன்சேகா வீதியைச்சேர்ந்த இரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு தனது மகனை களுகங்கைப் பாலத்தின் மேலிருந்து கங்கைக்குள் தள்ளிவிட முயன்றுள்ளார். சம்பவநேரம் அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இதை கண்ணுற்று சத்தமிட்டு சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர் கைது செய்யப்பட்ட தாய் களுத்துறை மேலதிக நீதிவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் தாயை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு சிறுவனை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் இதேவேளை இப்பெண்ணின் கணவன் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது .
Average Rating