காட்டு யானையின் தாக்குதலால் அநாதையான சிறுவர்கள்!!
சூரியவெவ, சுருவிருகம பிரதேசத்திற்குள் புகுந்த காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், லொறி ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (16) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கு ஆளான நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் இருந்து கராப்பிடிய வைத்தியசாலைக்கு மாற்றும் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற் கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர்களின் 08 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் அநாதைகளாகியிருப்பது பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அடிக்கடி காட்டு யானை புகுந்து அடாவடி புரிவதாகவும், மக்கள் மிகுந்த சிரமத்துடன் வசிப்பதாகவும், பிரதேச வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறியப்படுத்தியுள்ள போதிலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
Average Rating