அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!!
Read Time:1 Minute, 23 Second
கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்திற்கும் சுரேந்திர சூரவீர உள்ளிட்ட 2 சந்தேகநபர்களை கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கும் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating