பவுசர் மோதியதில் ஒருவர் பலி!!
Read Time:51 Second
வத்தளை ஹெந்தலை – எலகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
57 வயதுடைய ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பவுசர் வண்டியின் ஓட்டுனரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating