பதுங்கு குழிகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு; 25 விடுதலைபுலிகள் பலி
இலங்கையில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியது. 25 விடுதலை புலிகள் கொல்லப்பட்ட தாக ராணுவம் தெரிவித் துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் போர் நிறுத்தம் வாபஸ் ஆனதை தொடர்ந்து இரு தரப்புக்கும் சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் துனுக்கை பகுதியில் இலங்கை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் கண்டு பிடித்து அவற்றின் மீது பல திசைகளில் ஆழ ஊடுருவு வெடிக்கும் நவீன குண்டுகளை வீசியது. இதில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள், புல்டோசர், ஆயுத முகாம்கள் தகர்க்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அங்கு விடுதலைப்புலிகள் பாதுகாப்பு அரண்களை அமைக் கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த பகுதியில் தொடர்ச்சி யாக நடந்த தாக்குதலில் 25 விடுதலை புலிகள் கொல் லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைபுலிகள் தரப் பில் 900 வீரர்கள் கொல்லப் பட்டதாகவும் இப்போது விடுதலைபுலிகள் அமைப்பில் 5000 பேர் மட்டுமே உள்ள தாகவும் ராணுவம் தெரிவித் துள்ளது. விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவர்கள் சிறுவர்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்த்து போர் பயிற்சி அளித்துவருவதாக ராணுவத்தினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
Average Rating