மனைவி மீதான நிலமோசடி புகாரால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி!!
அரசு நிலத்தை தனியார் பள்ளிக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட குற்றச்சாட்டால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டோயோனக்கா நகரில் உள்ள மோரிட்டோமோ பள்ளியின் கவுரவ முதலமைச்சராக ஷின்சே அபேவின் மனைவி அஹி அபே இருந்தபோது மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் மோரிட்டோமோ பள்ளியின் விரிவாக்கத்திற்காக அரசு நிலம் மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இருந்த அஹி அபே பெயர் பின்பு நீக்கப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. மோசடி அம்பலமானதும் பள்ளியின் கவுரவ முதலமைச்சர் பதவியிலிருந்து அஹி அபே விலகினார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷின்சே அபே, தமக்கும் தமது மனைவிக்கும் இதில் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து அபே விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Average Rating