சால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு!!
தென் அமெரிக்காவின் சால்வடார் நாட்டில் நடத்தப்படும் பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஈஸ்டர் நாட்களில் பேய் வேடமணிந்த நபர்களிடம் சாட்டையால் அடி வாங்கினால் பேய், பிசாசு உட்பட சாத்தான்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்பது சால்வடார் மக்களின் நம்பிக்கை. கடந்த 10 நூற்றாண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவில் பேய் வேடமிட்ட நபர்கள் வீதிகளில் எதிர்படுபவர்கள் மீது சாட்டையை சுழற்றி அடிப்பதும், வலி தாங்காமல் இளம்பெண்கள் துடிப்பதும் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
விழாவின் முடிவில் இறை தூதுவர் பாதிரியார் வடிவில் வந்து சாத்தான் சபித்த நபர்கள் மீது 3 முறை நடந்து சென்று அவர்களின் பாவங்களை போக்குவதாக நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. சால்வடார் நாட்டின் கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்படும் சாத்தான் விரட்டும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மகிழ்வது வழக்கம்.
Average Rating