அமெரிக்காவில் 3 நாட்கள் மின்கம்பத்தின் உச்சியில் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்பு(உலக செய்தி)!!
அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. பூனை மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஒரு மணிநேரத்தில் 9,000 பேர் பகிர்ந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்பாராத விதமாக பூனை மின்கம்பத்தில் எறியுள்ளது. பின்னர் இறங்க முடியாமல் திணறிய பூனையை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்த பூனையின் உரிமையாளர் திங்கட்கிழமை பூனையை மீட்டுள்ளார். பூனையை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியடைந்ததையடுத்து, மின் ஊழியர் ஒருவர் ஏணியின் உதவியுடன் மின்கம்பத்தில் ஏறி பூனையை பத்திரமாக மீட்டார். இதனையடுத்து மீட்கப்பட்ட பூனையுடன் அப்பகுதி மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மீட்கப்பட்ட பூனையின் பெயர் ஜிப்சி என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Average Rating