வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

Read Time:1 Minute, 14 Second

தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியை கிழித்தெடுத்த குடும்ப பெண்!! (வீடியோ)
Next post மின் கம்பத்தில் மோதி ஒருவர் பலி!!