ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு: புவியியல் வல்லுநர்கள் தகவல்!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 9 Second
கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்காவின் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருவதாலும், பூமியின் மேல்புறம் அதிக நீரோட்டம் இருப்பதாலும் இந்தப் பிளவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய மாற்றம் வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating