ரயில்களின் சுத்தத்துக்கு பயணிகள் மதிப்பெண்!!
Read Time:1 Minute, 19 Second
ரயில்கள், ரயில் நிலையங்களில் செய்யப்படும் சுத்தத்துக்கு மக்கள் மதிப்பெண் அளிக்க உள்ளனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மை செய்யும் பணியை ஒப்பந்ததாரர்களிடம் ரயில்வே வாரியம் அளித்து வருகிறது. இப்பணிகள் இப்போது 1,700 ரயில்களில் நடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் ரயில் பெட்டிகளை ஒரு நாளில் 2 முறை சுத்தம் செய்வார்கள்.
இந்நிலையில், புதிதாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்ததாரர்களின் பணிக்கு பயணிகளும் 30 சதவீத மதிப்பெண்களை வழங்க வேண்டும். மற்ற மதிப்பெண்கள் ஒப்பந்த ஊழியர்கள் வருகைப் பதிவேடு, ரயில்வே அதிகாரிகளின் திடீர் சோதனை போன்றவற்றின் மூலம் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தால் ஒப்பந்தாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும்.
Average Rating