மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை
Read Time:1 Minute, 13 Second
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது.
Average Rating