தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்வெளி நிலையம்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 4 Second

சீனாவின் டியான்காங்-1 விண்வெளி நிலையம் நேற்று தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது. சீனா கடந்த 2011ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையத்தை ஏவியது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்த விண்வெளி நிலையம் சீனாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக சீனா அறிவித்தது. பின்னர் இந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாடற்ற நிலையில் சுற்றிக்கொண்டு இருந்தது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மார்ச் மாதம் 30ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் கட்டுப்பாடற்று சுற்றி வந்த பேருந்து அளவிலான விண்வெளி மையம் நேற்று மணிக்கு 17,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விழுந்தது. பூமியின் வளிமண்டல எல்லைக்குள் நுழைந்தபோது காற்றின் உராய்வு காரணமாக அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டன. எஞ்சிய பாகங்கள் தெற்கு பசிபிக் கடலில் விழுந்ததாக விஞ்ஞானிகள் ெதரிவித்துள்ளனர். கடலில் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சீனா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !!(அவ்வப்போது கிளாமர்)
Next post கமலின் குற்றச்சாட்டுக்கு ரஜினியின் அதிரடி பதில் !!( வீடியோ)