நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 18 பேர் பலி!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 2 Second
நைஜீரியாவில் குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இதற்காக இவர்கள் கடத்தல், கொலை மற்றும் குறிப்பிட்ட பகுதியை தாக்கி அதனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைடுகுரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு அரசு படைகள் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து தப்ப முயன்றபோது பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலியானவர்களில் பொதுமக்கள், தீவிரவாதிகள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
Average Rating