கிளிநொச்சி கொண்டு செல்ல தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு
Read Time:1 Minute, 0 Second
கிளிநொச்சிக்கு செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்த இரண்டு பாரஊர்திகள் நேற்றுக்காலை வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பெருமளவிலான பென்டோச் பற்றரிகள், செப்புத்தகடுகள், சீருடைகள், வெல்டிங் குச்சிகள் போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பார ஊர்திக்குள மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இப்பொருட்கள் கொண்டு செல்லப்படவிருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பாரஊர்திகளின் ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப் படுகிறது.
Average Rating