பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபருக்கு எதிராக பேரணி!!(உலக செய்தி)
பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபர் லூலாவை சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லோ உள்ளிட்ட பெருநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக சென்றனர். ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலாவை சிறையில் அடைக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்த லூயிஸ் இனாசியோ லூலாவை ஊழல் மற்றும் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், 9 1/2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating