விண்வெளியில் தேங்கியுள்ள 7500 டன் குப்பைகளை அகற்ற செயற்கைக்கோளை அனுப்பிய இங்கிலாந்து!!(உலக செய்தி)
விண்வெளிக்கு உலக நாடுகள் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. பல செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிந்தபின்னும், சில பழுதடைந்து செயலிழந்தும் விண்வெளியிலேயே குப்பைகளாக சுற்றித்திரிகின்றன. இப்படி விண்வெளிக் குப்பைகளாகிவிட்ட செயற்கைக்கோள்களின் அளவு மட்டும் 7,500 டன் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவை எந்த நேரமும் பூமிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் இருந்து அண்மையில் செயற்கைக்கோள் ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலையை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சில வாரங்களுக்கு விண்வெளி நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள், மே மாதம் முதல் விண்வெளிக் குப்பைகளை அகற்றும் பணியை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் ஒரு பகுதி விண்வெளி குப்பைகளைக் கண்காணிக்கவும், மற்றொரு பகுதி வலை போன்று செயல்பட்டு குப்பைகளைக் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Average Rating