காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சி : பாக். அமைச்சர் குற்றச்சாட்டு!!(உலக செய்தி)
‘‘காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கிறது’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சமீபத்தில் ஆயுதம் இல்லாத 20 பொதுமக்களை சுட்டுக்கொன்றதன் மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு மீண்டும் துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கும் இந்தியாவின் கொள்கை வெளிப்பட்டுள்ளது.
இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள வீரமிக்க மக்கள், இந்த உள்நாட்டு போராட்டத்தில் ஒப்பிடமுடியாத தியாகங்களை செய்துள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அமல்படுத்துவது மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி பாகிஸ்தான் வலியுறுத்துகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.
Average Rating