அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் கட்டிடத்தில் 50-வது மாடியில் தீ விபத்து!!(உலக செய்தி)
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ெசாந்தமான கட்டிடத்தின் 50வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 6 ேபர் காயமடைந்தனர். அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 58 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 50வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்த தகவலின் பேரின் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். 50வது மாடியில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 67 வயது முதியவர் இறந்தார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டிடத்தின் முதல் 3 தளத்தில் அதிபர் டிரம்ப் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அதிபர் குடும்பத்தினர் அங்கு இல்லை. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப், ‘ டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சிறந்த பணியை செய்துள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
Average Rating