சிங்கப்பூர் எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு!!( உலக செய்தி)
சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தம் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரீத்தம் சிங். 41 வயதான இவர், கடந்த 2011ல் நாடாளுமன்ற எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், தொழிலாளர் கட்சியின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சியில் கடந்த 2001ல் இருந்து பொதுச் செயலாளராக இருந்து வரும் லோ தியா கியாங், மீண்டும் இப்பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்றும், இளைஞர்களுக்கு வழிவிடப் போவதாகவும் கடந்த நவம்பரில் அறிவித்தார். இந்நிலையில், இந்த பதவிக்கு பிரீத்தம் சிங் போட்டியின்றி தேர்வு செய்ய்பபட்டுள்ளார். கட்சியின் தற்போதைய தலைவரான சில்வியா லிம், மீண்டும் இப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Average Rating