உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை!!
இந்தியாவில் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை வைத்தியர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை, வீட்டில் மீன் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது மீன் தொட்டியில் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீனை குழந்தை எடுத்து விழுங்கி விட்டது.
மீன் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், குழந்தையின் வாயில் இருந்து இரத்தம் வழிந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனே குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்த போது, மீன் குழந்தையின் தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் சென்று, உயிருடன் துடித்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டு, எண்டோஸ் கோப்பி மூலம் வயிற்றில் இருந்த மீனை இரண்டாக வெட்டி வைத்தியர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரேஷ்மி கூறுகையில், ‘குழந்தைகள் ஏதாவது பொருளை விழுங்கி அவசர சிகிச்சைக்கு வருவது வழக்கம். ஆனால் உயிருள்ள மீனை விழுங்கியது சாதாரணமானது அல்ல’ என தெரிவித்துள்ளார்.
Average Rating