ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக வந்த 13 வயது சிறுவன்; கவர்னரை கொல்ல வந்த போது பிடிபட்டான்

Read Time:1 Minute, 39 Second

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் மற்றும் கார்குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். தற்கொலைபடை தாக்குதல்களில் இப்போது பெண்களும்- குழந்தைகளும் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்குள்ள காஸ்னி மாகாணத்தின் கவர்னரை தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய வந்த ஒரு பெண் மற்றும் ஒரு 13 வயது சிறுவனை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அந்த கவர்னரின் மாளிகைக்கு பின்பகுதியில் தங்கள் இடுப்பில் வெடி குண்டுகளை கட்டிக் கொண்டு வந்த பெண்ணும் சிறுவனும் பதுங்கி இருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வெடிகுண்டு பெண் பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வந்ததாக தெரிவித்தார். அந்த 13 வயது சிறுவன் அவரது மகனாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 14 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த போது பிடிபட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி
Next post பெண் விசாரணை அதிகாரி மீது பின்லேடனின் டிரைவராக இருந்த சலிம் அகமது ஹம்டன் செக்ஸ் குற்றச்சாட்டு