ஜீன்ஸ், செல்போனுக்கு தடை!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 49 Second

அரியானா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனிபட் மாவட்டத்தில் உள்ள இஷாபூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பிரேம்சிங் தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். நவீன உடைகளால் பெண்களுக்கு ஆபத்து என தெரிவித்துள்ள பிரேம் சிங் செல்போன் மூலம் இளம்பெண்களை ஆண்கள் எளிதில் தொடர்புகொள்ள முடிவதாக கூறியுள்ளார்.

அசாம்பாவிதங்களை தடுக்கவே ஜீன்ஸ், செல்போன் ஆகியவற்றை பெண்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இஷாபூருக்கு அருகில் மற்ற ஊர்களுக்கு ஊராட்சிகளும் ஜீன்ஸ், செல்போன் தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இஷாபூர் கிராம பெண்கள் கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளம்பெண்களின் எதிர்ப்பு பற்றி கவலையில்லை என்று தெரிவித்திருக்கும் ஊராட்சி தலைவர் ஜீன்ஸ் அணியும், செல்போனில் பேசும் பெண்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஊராட்சி தலைவரின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மரணம் !!(உலக செய்தி)
Next post அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் வெடித்து விபத்து : பெண் உயிரிழப்பு!!(உலக செய்தி)