ஸ்பெயின் நாட்டில் 2 விமானப்படை வீரர்கள் ஓரின சேர்க்கை திருமணம்
Read Time:1 Minute, 8 Second
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு முடிவதற்குள் 1,300 ஓரின சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அந்நாட்டு விமானப்படை வீரர்களான அல்பெர்டோ லினரோ, அல்பெர்டோ சான்சஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். ராணுவத்தில் இருப்பவர்கள் இத்தகைய திருமணம் செய்துகொள்வது, இதுவே முதல் முறை ஆகும்.
திருமணத்தின்போது அவர்கள் விமானப்படை சீருடையில் இருந்தனர். திருமண உறுதிமொழி எடுத்த பின்னர் கண்ணீருடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இதில் நண்பர்கள், குடும்பத்தினர், ஓரின சேர்க்கையாளர்கள் பங்கேற்றனர்.