பொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 21 Second
புதுக்கோட்டையில் மதுரை ஆதீனம் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், தமிழகத்தை ஆளும் இபிஎஸ், ஓபிஎஸ் செய்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சி அனைத்தும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.
எந்த கட்சியை சேர்ந்தவர்களும், தங்கள் கருத்தை தெரிவிக்கும்போது, கண்ணியம் தவறாமல் தெரிவிக்க வேண்டும் இந்தியாவில் பாலியல் குற்றங்களை தற்போதுள்ள சட்டங்களை கொண்டு தடுக்க முடியாது. பாலியல் குற்றங்களை செய்வோருக்கு அரபு நாடுகளில் வழங்குவதைப் போன்ற தண்டனை வழங்க வேண்டும். பாலியல் குற்றம் செய்வோரை பொது இடங்களில் நிறுத்தி வைத்து கால் அல்லது கையை வெட்டவேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating