சிசிடிவி கேமராக்களுடன் ரயிலில் பெண்கள் பெட்டி நடுப்பகுதிக்கு மாறுகிறது!!(உலக செய்தி)
ரயில்களில் கடைசியில் இருக்கும் பெண்கள் பெட்டியை, நடுப்பகுதிக்கு மாற்றவும், அதில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், புதிய நிறம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ரயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோகானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை ரயில்வேயிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பல்வேறு மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* ரயில்களில் கடைசியில் இருப்பதால்தான் பெண்களுக்கு அவசரக் காலங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் போகிறது. இதனால் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற வேண்டும்.
* பெண்கள் பெட்டிகளில் மட்டும், அவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை அமைக்கலாம்.
* பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காணும் வகையில், ரயில் பெட்டிகளின் மற்றவற்றின் நிறத்தில் இருந்து இதற்கு வேறுபட்ட நிறத்தை பூசலாம்.
* நீண்ட தூர மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள், அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating