பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள் : நடிகை அனுஷ்கா ஓபன் லெட்டர் !!(சினிமா செய்தி)
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இணை பிரியாத ஜோடிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனுஷ்கா சர்மாவுக்கு நேற்று 30வது பிறந்த நாள். அவருக்கு பாலிவுட் கலைஞர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் கலைஞர்களும் வாழ்த்து கூறினார்கள். விராத் கோஹ்லி, அனுஷ்காவுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்தியதுடன் அதை அவரே செல்பி எடுத்து இணைய தளத்தில் பகிர்ந்தார்.
‘எனக்கு தெரிந்தவரையில் மிகவும் பாசிடிவ் எண்ணத்துடனும் மற்றும் நேர்மையானவராகவும் திகழ்பவர் அனுஷ்கா சர்மா’ என கமென்ட்டும் வெளியிட்டுள்ளார் விராத். அனுஷ்கா தனது பிறந்தநாள் செய்தியாக எழுதிய கடிதத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ரசிகர்கள், நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களால் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். பெண்களுக்கு அதிக மரியாதை தாருங்கள். உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக நான் ஆண்டவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் அனுஷ்கா சர்மா
Average Rating