சமந்தாவை அழவைத்த நடிகை !!(சினிமா செய்தி)
நடிகை சமந்தா சிரித்த முகத்துடனே ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவரும் சந்தோஷமாகவே தனது சூழலை அமைத்துக்கொள்வார். நாக சைதன்யாவை மணந்தபிறகு அவரது சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நடிகையின் வாழ்க்கை அவரை கண்ணீர் விட வைத்திருக்கிறது. இதுபற்றி சமந்தா கூறியது: திரையுலகில் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சாவித்ரி.
அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க நான் பிரதானமான வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும் பத்திரிகையாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவரைப்போலவே நானும் ஒரு நடிகையாக திரைத்துறையில் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இதில் நடித்திருப்பவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியதை மறக்க முடியாது.
ஒரு காட்சி அவர் எவ்வளவு பெரிய நடிகை என்பதற்கு உதாரணமாக அமையும். அக்காட்சியில் நான் ஏழு அல்லது எட்டு முறை டப்பிங் பேசினேன். ஒவ்வொரு முறை பேசியபோதும் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன். இதற்காக கிளிசரின் பயன்படுத்தவில்லை. என் வாழ்வில் இப்படியொரு ஒரு உணர்வை எந்த காட்சிக்காக டப்பிங் பேசியபோதும் நான் பெற்றதில்லை. அந்த உருக்கமான காட்சிக்காக நான் தலைவணங்கினேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
Average Rating